Friday, April 26, 2019

நன்றியுணர்வு அனைத்தையும் மாற்ற வல்லது


நன்றியுணர்வு அனைத்தையும் மாற்ற வல்லது

நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள்.

. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.
. நமக்கு பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
.நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் :
 அ. "உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம்".

ஆ. "நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய்".

இ. 'உன் உதவி எனக்கு தேவை".

ஈ. "நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்".

. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம்.

. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.
. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.
. "நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன்,
நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை" என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் லிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை.
அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.
.  நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும்.

 இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள்.
உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள்.தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை.
எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

நன்றியுணர்வு  நம்மிடம் பெருகும் போது நாம் எடுக்கும் காரியங்கள்
ஜெயமாகும்

Sunday, April 14, 2019

பிரபஞ்ச சக்தி


'சக்தி' என்ற
புத்தகத்தில் இருந்து சில துளிகள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌟 சக்தி 🌟

இப்பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள அனைத்து முழுமைக்கும் இதுதான் காரணம்.

நீங்கள் நிச்சயமாக ஒரு மகத்தான வாழ்க்கை வாழத்தான் பிறந்திருக்கிறீர்கள்

நீங்கள் நேசிக்கும் மற்றும் விரும்பும் அனைத்தையும் நீங்கள் நிச்சயமாக பெறத்தான் வேண்டும். நீங்கள் சாதிக்க விரும்பும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் கண்டிப்பாக சாதிக்கத்தான் வேண்டும்.
உங்கள் குடும்பத்தினருடனான உங்களது உறவுகளும் உங்கள் நண்பர்களுடனான உங்கள் உறவுகளும் மகிழ்ச்சியால் நிரம்பி வழியத்தான் வேண்டும். ஒரு முழுமையான அற்புதமான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அனைத்து பணத்தையும் நீங்கள் கைவசப்படுத்த தான் வேண்டும். உங்களது அனைத்து கனவுகளையும் நீங்கள் நனவாக்க தான் வேண்டும்.
நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் நிச்சயம் நீங்கள் பயணிக்க தான் வேண்டும்.
நீங்கள் வியாபாரத்தை துவக்க விரும்பினால் நீங்கள் அதை  துவக்கியாகத்தான் வேண்டும்.
 நீங்கள் நடனம் கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது உல்லாச படகை செலுத்த கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது இத்தாலிய மொழியை கற்றுக்கொள்ள விரும்பினாலோ நீங்கள்  நீங்கள் ஒரு இசைக் கலைஞராகவோ அல்லது அறிஞராகவோ அல்லது ஒரு கண்டுபிடிப்பாளராக  ஒரு  பெற்றோராகவோ அல்லது எதுவாக ஆக விரும்பினாலும் நீங்கள் அதுவாக ஆகத்தான் வேண்டும்

நீங்கள் ஒவ்வொரு நாளும் விழித்தெழும் போதும் உற்சாகத்தால் நிரம்பி வழிய வேண்டும். ஏனெனில் அன்றைய நாள் முழுவதும் மாபெரும் விஷயங்களால் நிரம்பியிருக்க போவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் வலிமையாகவும் பாதுகாப்பாகவும் உணர வேண்டும்.
உங்களைப் பற்றி நீங்கள் சிறப்பாக உணர்ந்தாக வேண்டும்.
நீங்கள் விலைமதிப்பற்றவர் என்பதை நீங்கள்  அறிந்தாக வேண்டும்.

நீங்கள்  வெற்றி பெற்றே ஆக வேண்டும்

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தே ஆக   வேண்டும்.

நீங்கள் ஒரு மகத்தான வாழ்க்கையை வாழ்ந்தே ஆக வேண்டும்

வாழ்வை முழுமையாக அனுபவித்து நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறத்தான் வேண்டும்.
அதே நேரத்தில் நீங்கள் ஆரோக்கியத்தாலும் மகிழ்ச்சியாலும் வலிமையாலும் உற்சாகத்தாலும்
அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும்.
ஏனெனில் அதுதான் ஒரு மகத்தான வாழ்க்கை.

நீங்கள் என்னவெல்லாம் ஆக விரும்புகிறீர்களோ எவற்றையெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ எவற்றையெல்லாம் பெற விரும்புகிறீர்களோ
அதை அடைவதற்கான சக்தி உங்களிடம் இருக்கிறது

நல்ல விஷயங்களையே அதிகரிக்க முடியும்
உங்கள் வாழ்வில் உள்ள எந்த ஒரு எதிர்மறையான விஷயத்தையும் மாற்ற முடியும்
உங்கள்ஆரோக்கியம் செல்வம் வேலை உறவுகள் மற்றும் உங்கள் வாழ்வின் எந்த ஒரு பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி அவற்றை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் சக்தி உங்களிடம்தான் இருக்கிறது.

உங்கள் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தி உங்களிடம் உள்ளது

அந்த ஆதிக்க சக்தி உங்களுக்குள் இருக்கிறது

அதுதான் அன்பு சக்தி அன்பு தான் நேர்மறை சக்தி யின் உச்சகட்ட ஆற்றல்.

🌷 கொடுத்தல்
பெறுதல் விதி 🌷

கொடுத்தல் என்னும் ஒவ்வொரு வினையும்
பெறுதல் என்னும் எதிர்வினையை உருவாக்குகிறது.
நீங்கள் பெறுபவை நீங்கள் கொடுத்தவற்றிருக்கு  இணையாகவே எப்போதும் இருக்கும்.

உங்கள் வாழ்வில் நீங்கள் எவற்றை வெளிப்படுத்து
கிறார்களோ? அவை மீண்டும் உங்களிடம் வந்தாக வேண்டும்.
பிரபஞ்சத்தின் இயற்பியல் மற்றும் கணிதம் இது.

நீங்கள் நேர்மறையாக நடந்து கொண்டால் நேர்மறையானவற்றைத் திரும்பப் பெறுவீர்கள்

எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தினால்  எதிர்மறையான விளைவுகளையே திரும்பப் பெறுவீர்கள்

நேர்மறையான போக்கை வெளிப்படுத்தினால்  நேர்மறையான விஷயங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கையை திரும்பப் பெறுவீர்கள்

எதிர்மறை போக்கை வெளிப்படுத்தினால் எதிர்மறையான விஷயங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கையை திரும்பப் பெறுவீர்கள்.

நீங்கள் எவ்வாறு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நடந்து கொள்கிறீர்கள் உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மூலம் தான்.

வெற்றியின் இரகசியம்

* *வெற்றியின் இரகசியம்* 👍
..........................................

''உங்கள் பக்கத்தில் இருப்பது யார்??..
...........................................

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெலல அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக் கொள்கிறது.
முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள்,

உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?

இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்.

மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறானவர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது..காரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். கார் திடிரென்று நின்றது. ஓட்டுனர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

மற்ற நண்பரால் தூங்க முடியவில்லை.   ஓட்டுனர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார்...

ஆம்.,நண்பர்களே..,

பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெறுவதைப் போலவே உங்களைப் பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்.

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகில் உள்ள அனைவரும் உங்களை விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்... உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.......எனவே *நீங்கள் வெற்றியாளர்களையும், வெற்றி பெற நினைப்பவர்களிடமும் உங்களை இனைத்துக்கொள்ளுங்கள்.வெற்றி நிச்சயம்*

ஒவ்வொரு கணத்திலும் அற்புதம்


எந்த ஒரு கணத்திலும் நீங்கள் நேர்மறையான சிந்தனையை வெளிப்படுத்துகிறீர்கள் அல்லது எதிர்மறையான சிந்தனையை வெளிப்படுத்துகிறீர்கள். நீங்கள் நேர்மறையான உணர்வுகளை கொண்டிருக்கிறீர்கள் அல்லது எதிர்மறையான உணர்வுகளை கொண்டிருக்கிறீர்கள்.


அவை நேர்மறையானவையா அல்லது எதிர்மறையானவையா என்பதை பொறுத்துத்தான் உங்கள் வாழ்வில் நீங்கள் திரும்பப்பெறும் விஷயங்களும் தீர்மானிக்கப்படுகின்றன

உங்கள் வாழ்வில் ஒவ்வொரு கணத்தையும் உருவாக்கும் அனைத்து 
மக்கள்களும்,
சூழல்களும், நிகழ்வுகளும் நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்களாலும் உணர்வுகளாலும் உங்களிடம் ஈர்க்கப்படுகின்றனர்.

"வாழ்க்கை ஏதோ தானாக உங்களுக்கு நிகழவில்லை
நீங்கள் எதை கொடுத்துருக்கிறீர்களோ அதன் அடிப்படையில் உங்கள் வாழ்வில்
நீங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறீர்கள்".

நீங்கள் எதுவாக இருக்க வேண்டும்.
எவற்றை எல்லாம் செய்ய வேண்டும். எவற்றையெல்லாம் பெற வேண்டும் என்று விரும்பி கனவு கண்டுகொண்டு இருக்கிறீர்களோ? அந்த கனவு வாழ்க்கை நீங்கள் நினைத்திருந்ததை விடவும் 
வெகு அருகிலேயே எப்பொழுதும் இருந்து வந்துள்ளது.
நீங்கள் விரும்பும் அனைத்துக்குமான சக்தி உங்களுக்குள்தான் இருக்கிறது.

"ஓர் ஒப்புயர்வற்ற சக்தி
ஒரு கோலோச்சும் ஆற்றல் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பரவி
ஆட்சி செலுத்தி வருகிறது.
நீங்கள் இந்த சக்தியின் ஓர் அங்கம்".

நன்றி நன்றி நன்றி

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கர்ம வினை


*கர்ம வினை.*

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.

அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.

கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா?  கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை.  விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை.  அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என அறிவுறுத்தினான்.

ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை  கூறியதோடு நில்லாமல்
 *இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள்* என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. *அந்தணரைக் கொன்ற  கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும்* என்று.

 *காரணம்*

 _மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்._

 *உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும்.*

 *எனவே, மற்றவர்கள் பற்றி பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.*