Friday, November 22, 2019

மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி


🌷💐🌷💐🌷💐🌷

இன்று எனக்குள் புத்துணர்வுடன் கூடிய
புதுத்தெளிவை உணர்கிறேன்.
பெரும் பணவரவு இன்று
என்னிடம்வர தயாராக இருக்கிறது.
என் எண்ணங்கள் எல்லாம் இன்று ஈடேரும்  என்பதை என் மனம் உணர்கிறது.

🌷💐🌷💐🌷💐🌷

நன்றி இறைவா!

🌷மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி 🌷

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.
ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் ரஷ்யாவுக்குத்தான்.

டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களே

சக்கரவர்த்தியாவதும் சரி ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும் சரி கடும் நோய் குணமாவதும் சரி எதுவானலும் சரி நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.
அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.
🌷💐🌷💐🌷💐🌷

ரகசியம் புத்தகத்திலிருந்து


🌷ரகசியம் புத்தகத்திலிருந்து🌷

🌹எனக்கு எப்பொழுதும் மிகவும் உத்வேகம் தரும்
வாசகங்கள் இதோ🌹

🌷 நடந்தது நடந்துகொண்டிருப்பது
நடக்கப்போவது யாவற்றிக்கும்
இந்த ரகசியமே பதிலாக உள்ளது.

🌷 உங்கள் எண்ணமும் உணர்வும் உங்கள் வாழ்கையை உருவாக்குகிறது.

🌷 நீங்கள் பயணப்படும் போதே உங்களுக்கென தனிபிரபஞ்சத்தை உருவாக்குகிறீர்கள்.

🌷 நம்பிக்யைுடன் முதல் அடியை எடுத்து வையுங்கள் முழுபடிக்கட்டையும் பார்க்கத் தேவையில்லை முதல் படியில் ஏறுங்கள்

🌷 நம் எண்ணங்களின் வெளிப்பாடே நம் இன்றைய நிலை

🌷 இந்த சக்தி என்னவென்று என்னால் சொல்ல முடியாது அது இருக்கின்றது என்பது மட்டும் எனக்கு தெரியும்.

🌷 கற்பனைதான் எல்லாமும் அதுதான் வாழ்வில் வரவிருக்கும் வசிகரங்களின் முன்னோட்டம்

🌷 மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ அதனால் அதை அடைய முடியும்

🌷 உங்களுக்கு ஒரு உத்வேகமான ஒரு எண்ணம் ஏற்பட்டால் அதை நம்பி உடனே செயலில் இறங்க வேண்டும் என்பதுதான் ரகசியம்.

🌷 கவனம் போகின்ற இடத்தில் சக்தி பாயும்

🌷 சக்தியே(ஆற்றல்) இந்த பிரபஞ்சத்தை ஆட்கொண்டிருக்கிறது.

🌷 சக்தி என்பது நமக்குள்ளே உள்ளது அதனால் அது நமது கட்டுப்பாட்டில் உள்ளது.

🌷 நீங்கள் எல்லையற்ற சக்தி உடையவர் உங்களுக்கு உச்சவரம்பே கிடையாது

🌷 உங்கள் உள்ளுணர்வின்படி செயல்படுங்கள் அது உங்களை எங்கே அழைத்து செல்கிறேதோ அங்கே தைரியமாக செல்லுங்கள் தடைகள் நீங்கி வெறும் சுவர்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடத்தில் ஒரு புதிய பிரபஞ்சத்தின் கதவுகள் உங்களுக்காக திறக்கும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹

பிரபஞ்ச சக்திக்கு நன்றி!

🌺🌺🌺🌺🌺🌺🌺

நன்றி! நன்றி! நன்றி!
💐💐💐💐💐💐💐