Friday, November 22, 2019

ரகசியம் புத்தகத்திலிருந்து


🌷ரகசியம் புத்தகத்திலிருந்து🌷

🌹எனக்கு எப்பொழுதும் மிகவும் உத்வேகம் தரும்
வாசகங்கள் இதோ🌹

🌷 நடந்தது நடந்துகொண்டிருப்பது
நடக்கப்போவது யாவற்றிக்கும்
இந்த ரகசியமே பதிலாக உள்ளது.

🌷 உங்கள் எண்ணமும் உணர்வும் உங்கள் வாழ்கையை உருவாக்குகிறது.

🌷 நீங்கள் பயணப்படும் போதே உங்களுக்கென தனிபிரபஞ்சத்தை உருவாக்குகிறீர்கள்.

🌷 நம்பிக்யைுடன் முதல் அடியை எடுத்து வையுங்கள் முழுபடிக்கட்டையும் பார்க்கத் தேவையில்லை முதல் படியில் ஏறுங்கள்

🌷 நம் எண்ணங்களின் வெளிப்பாடே நம் இன்றைய நிலை

🌷 இந்த சக்தி என்னவென்று என்னால் சொல்ல முடியாது அது இருக்கின்றது என்பது மட்டும் எனக்கு தெரியும்.

🌷 கற்பனைதான் எல்லாமும் அதுதான் வாழ்வில் வரவிருக்கும் வசிகரங்களின் முன்னோட்டம்

🌷 மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ அதனால் அதை அடைய முடியும்

🌷 உங்களுக்கு ஒரு உத்வேகமான ஒரு எண்ணம் ஏற்பட்டால் அதை நம்பி உடனே செயலில் இறங்க வேண்டும் என்பதுதான் ரகசியம்.

🌷 கவனம் போகின்ற இடத்தில் சக்தி பாயும்

🌷 சக்தியே(ஆற்றல்) இந்த பிரபஞ்சத்தை ஆட்கொண்டிருக்கிறது.

🌷 சக்தி என்பது நமக்குள்ளே உள்ளது அதனால் அது நமது கட்டுப்பாட்டில் உள்ளது.

🌷 நீங்கள் எல்லையற்ற சக்தி உடையவர் உங்களுக்கு உச்சவரம்பே கிடையாது

🌷 உங்கள் உள்ளுணர்வின்படி செயல்படுங்கள் அது உங்களை எங்கே அழைத்து செல்கிறேதோ அங்கே தைரியமாக செல்லுங்கள் தடைகள் நீங்கி வெறும் சுவர்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடத்தில் ஒரு புதிய பிரபஞ்சத்தின் கதவுகள் உங்களுக்காக திறக்கும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹

பிரபஞ்ச சக்திக்கு நன்றி!

🌺🌺🌺🌺🌺🌺🌺

நன்றி! நன்றி! நன்றி!
💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment