Monday, June 7, 2021

அதிசயங்களுக்கும் நன்றி

 Nijam.......


உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி விட்டு வேலையைப் பாருங்கள். 


விரைவில் அதிசயம் நடக்கும், 

ஏற்படப் போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும்.


அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்,


நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், 

ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். 

அது எப்படியும் சரி செய்து விடும். 


உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப் பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்.


உங்களைச் சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலைபட வேண்டாம்.


உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல் படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.


பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்று கொள்ளுங்கள்.


நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், 


ஏற்பட போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று 

மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். 


நிறுத்தாமல் சொல்லிக் 

கொண்டே இருங்கள். 


உங்கள் வார்த்தைகள், 

சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்.


உங்கள் நேர்மறையான சக்தி, இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.

Saturday, December 19, 2020

வெற்றியின் இரகசியம்

Deepa Dhanapal:
Good morning 👍* *வெற்றியின் இரகசியம்* 👍
..........................................

''உங்கள் பக்கத்தில் இருப்பது யார்??..
...........................................

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெலல அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக் கொள்கிறது.
முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள்,

உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?

இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்.

மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறானவர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது..காரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். கார் திடிரென்று நின்றது. ஓட்டுனர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

மற்ற நண்பரால் தூங்க முடியவில்லை.   ஓட்டுனர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார்...

ஆம்.,நண்பர்களே..,

பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெறுவதைப் போலவே உங்களைப் பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்.

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகில் உள்ள அனைவரும் உங்களை விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்... உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.......எனவே *நீங்கள் வெற்றியாளர்களையும், வெற்றி பெற நினைப்பவர்களிடமும் உங்களை இனைத்துக்கொள்ளுங்கள்.வெற்றி நிச்சயம்*

வாழ்க்கை என்பது அழகான பயணம்

 *#தினமும் காலையில் எழுந்தவுடன் (4.30am to 6 am)ஆகாயத்தை பார்த்து " அண்ட சராசரத்தில் நிறைந்திருக்கும் என் பிரபஞ்சத் தந்தையே உங்களின் அபரிமிதமான சக்தி என் உடல் ,மனம்,ஆன்மா மூன்றிலும் இருந்து கொண்டிருக்கிறது.." என்று 5 முறை சொல்லுங்கள். உங்கள் தேவைகளை பிரபஞ்சம் நிறைவேற்றும்.*


#நீங்கள் ஒவ்வொரு நாளும் உற்சாகமாக இருக்க,

.

தினமும் காலையில் எழுந்த உடன் உங்கள் கால் தரையில் படுவதற்கு முன்னர் இந்த நன்றிகளை சொல்லுங்கள்...

.

இந்த நன்றிகள் உங்கள் வாழ்க்கையை மாற்ற கூடிய வேண்டுதல்கள் / பிராத்தனைகள் / ஜெபங்கள் / துவாக்கள்

.

நன்றி , நன்றி, நன்றி, 

என்னை சிறப்பாக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி..

.

என்னை ஆரோக்கியமாக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி...

.

என்னை வலிமையாக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி...

.

என்னை அறிவாளியாக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி..

.

என்னை கம்பீரமாகவும், மாயஜாலமாகவும் ,அன்பாகவும் வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி..

.

என்னை நல்ல மனிதராக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி.

.

என்னை செல்வ செழிப்போடு, நன்றியோடு வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி..

.

என்னை அற்புதமாக வைத்து கொண்டு இருப்பதற்கு நன்றி..

.

என்று தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவில் தூங்க செல்வதற்கு முன்னரும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள்....

.

நீங்கள் நன்றிகளை சொல்லி கொண்டே இருக்கும்போது மாயாஜாலத்தை உணர்வீர்கள்....

.

சந்தோசத்தை உணர்வீர்கள்.....உங்கள் லட்சியங்களுக்கு நீங்கள் காந்தமாக உணர்வீர்கள்...

.

உங்களிடம் நன்றியுணர்வு அதிகரிக்க அதிகரிக்க உங்களிடம் நல்ல உணர்வுகள் அதிகரிக்கும். 

.

உங்களிடம் இருந்த பொறமை , பேராசை, மனஅழுத்தம் , கவலைகள், பயம் எல்லாம் மறைந்து போகும். மேலும் அவற்றை மீண்டும் உங்களிடம் வர அனுமதிக்காது.

.

உங்கள் மனதில் தெளிவு பிறக்கும், உங்களை சுற்றி எப்போதும் நேர்மறையான vibration இருக்கும்.


#பாசிட்டிவ்வாக #இருப்பவர்களோடு #பழகுங்கள்*


நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். 

_எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள்._


*"தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது'* என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்.


*உற்சாகமாக இருங்கள்*

சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.

இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், *இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது* என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.


*பவர்ஃபுல்லாக உணருங்கள்*

உடல் வலிமை, 

பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி 

*மனவலிமை மிக முக்கியம்.*

உங்களைப் போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. 

உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். *உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.*


_உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்._


*நேசியுங்கள்*

உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.

_உங்களை உங்களுக்குப் பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்._


உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்குப் புரிய வையுங்கள்.


உங்களைப் போல அழகானவர் யாரும் இல்லை, 

உங்களைப் போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.


*பயணப்படுங்கள்*

வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. 

_இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும், சிலருக்கு *தாமதமாக* வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது._ வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.


*வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.* ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கி.  றதோ இல்லையோ, *உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.*  ....                                 

Friday, November 22, 2019

மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி


🌷💐🌷💐🌷💐🌷

இன்று எனக்குள் புத்துணர்வுடன் கூடிய
புதுத்தெளிவை உணர்கிறேன்.
பெரும் பணவரவு இன்று
என்னிடம்வர தயாராக இருக்கிறது.
என் எண்ணங்கள் எல்லாம் இன்று ஈடேரும்  என்பதை என் மனம் உணர்கிறது.

🌷💐🌷💐🌷💐🌷

நன்றி இறைவா!

🌷மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி 🌷

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.
ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் ரஷ்யாவுக்குத்தான்.

டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களே

சக்கரவர்த்தியாவதும் சரி ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும் சரி கடும் நோய் குணமாவதும் சரி எதுவானலும் சரி நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.
அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.
🌷💐🌷💐🌷💐🌷

ரகசியம் புத்தகத்திலிருந்து


🌷ரகசியம் புத்தகத்திலிருந்து🌷

🌹எனக்கு எப்பொழுதும் மிகவும் உத்வேகம் தரும்
வாசகங்கள் இதோ🌹

🌷 நடந்தது நடந்துகொண்டிருப்பது
நடக்கப்போவது யாவற்றிக்கும்
இந்த ரகசியமே பதிலாக உள்ளது.

🌷 உங்கள் எண்ணமும் உணர்வும் உங்கள் வாழ்கையை உருவாக்குகிறது.

🌷 நீங்கள் பயணப்படும் போதே உங்களுக்கென தனிபிரபஞ்சத்தை உருவாக்குகிறீர்கள்.

🌷 நம்பிக்யைுடன் முதல் அடியை எடுத்து வையுங்கள் முழுபடிக்கட்டையும் பார்க்கத் தேவையில்லை முதல் படியில் ஏறுங்கள்

🌷 நம் எண்ணங்களின் வெளிப்பாடே நம் இன்றைய நிலை

🌷 இந்த சக்தி என்னவென்று என்னால் சொல்ல முடியாது அது இருக்கின்றது என்பது மட்டும் எனக்கு தெரியும்.

🌷 கற்பனைதான் எல்லாமும் அதுதான் வாழ்வில் வரவிருக்கும் வசிகரங்களின் முன்னோட்டம்

🌷 மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ அதனால் அதை அடைய முடியும்

🌷 உங்களுக்கு ஒரு உத்வேகமான ஒரு எண்ணம் ஏற்பட்டால் அதை நம்பி உடனே செயலில் இறங்க வேண்டும் என்பதுதான் ரகசியம்.

🌷 கவனம் போகின்ற இடத்தில் சக்தி பாயும்

🌷 சக்தியே(ஆற்றல்) இந்த பிரபஞ்சத்தை ஆட்கொண்டிருக்கிறது.

🌷 சக்தி என்பது நமக்குள்ளே உள்ளது அதனால் அது நமது கட்டுப்பாட்டில் உள்ளது.

🌷 நீங்கள் எல்லையற்ற சக்தி உடையவர் உங்களுக்கு உச்சவரம்பே கிடையாது

🌷 உங்கள் உள்ளுணர்வின்படி செயல்படுங்கள் அது உங்களை எங்கே அழைத்து செல்கிறேதோ அங்கே தைரியமாக செல்லுங்கள் தடைகள் நீங்கி வெறும் சுவர்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடத்தில் ஒரு புதிய பிரபஞ்சத்தின் கதவுகள் உங்களுக்காக திறக்கும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹

பிரபஞ்ச சக்திக்கு நன்றி!

🌺🌺🌺🌺🌺🌺🌺

நன்றி! நன்றி! நன்றி!
💐💐💐💐💐💐💐

Friday, April 26, 2019

நன்றியுணர்வு அனைத்தையும் மாற்ற வல்லது


நன்றியுணர்வு அனைத்தையும் மாற்ற வல்லது

நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள்.

. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.
. நமக்கு பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
.நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் :
 அ. "உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம்".

ஆ. "நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய்".

இ. 'உன் உதவி எனக்கு தேவை".

ஈ. "நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்".

. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம்.

. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.
. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.
. "நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன்,
நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை" என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் லிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை.
அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.
.  நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும்.

 இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள்.
உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள்.தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை.
எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

நன்றியுணர்வு  நம்மிடம் பெருகும் போது நாம் எடுக்கும் காரியங்கள்
ஜெயமாகும்

Sunday, April 14, 2019

பிரபஞ்ச சக்தி


'சக்தி' என்ற
புத்தகத்தில் இருந்து சில துளிகள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌟 சக்தி 🌟

இப்பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள அனைத்து முழுமைக்கும் இதுதான் காரணம்.

நீங்கள் நிச்சயமாக ஒரு மகத்தான வாழ்க்கை வாழத்தான் பிறந்திருக்கிறீர்கள்

நீங்கள் நேசிக்கும் மற்றும் விரும்பும் அனைத்தையும் நீங்கள் நிச்சயமாக பெறத்தான் வேண்டும். நீங்கள் சாதிக்க விரும்பும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் கண்டிப்பாக சாதிக்கத்தான் வேண்டும்.
உங்கள் குடும்பத்தினருடனான உங்களது உறவுகளும் உங்கள் நண்பர்களுடனான உங்கள் உறவுகளும் மகிழ்ச்சியால் நிரம்பி வழியத்தான் வேண்டும். ஒரு முழுமையான அற்புதமான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அனைத்து பணத்தையும் நீங்கள் கைவசப்படுத்த தான் வேண்டும். உங்களது அனைத்து கனவுகளையும் நீங்கள் நனவாக்க தான் வேண்டும்.
நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் நிச்சயம் நீங்கள் பயணிக்க தான் வேண்டும்.
நீங்கள் வியாபாரத்தை துவக்க விரும்பினால் நீங்கள் அதை  துவக்கியாகத்தான் வேண்டும்.
 நீங்கள் நடனம் கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது உல்லாச படகை செலுத்த கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது இத்தாலிய மொழியை கற்றுக்கொள்ள விரும்பினாலோ நீங்கள்  நீங்கள் ஒரு இசைக் கலைஞராகவோ அல்லது அறிஞராகவோ அல்லது ஒரு கண்டுபிடிப்பாளராக  ஒரு  பெற்றோராகவோ அல்லது எதுவாக ஆக விரும்பினாலும் நீங்கள் அதுவாக ஆகத்தான் வேண்டும்

நீங்கள் ஒவ்வொரு நாளும் விழித்தெழும் போதும் உற்சாகத்தால் நிரம்பி வழிய வேண்டும். ஏனெனில் அன்றைய நாள் முழுவதும் மாபெரும் விஷயங்களால் நிரம்பியிருக்க போவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் வலிமையாகவும் பாதுகாப்பாகவும் உணர வேண்டும்.
உங்களைப் பற்றி நீங்கள் சிறப்பாக உணர்ந்தாக வேண்டும்.
நீங்கள் விலைமதிப்பற்றவர் என்பதை நீங்கள்  அறிந்தாக வேண்டும்.

நீங்கள்  வெற்றி பெற்றே ஆக வேண்டும்

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தே ஆக   வேண்டும்.

நீங்கள் ஒரு மகத்தான வாழ்க்கையை வாழ்ந்தே ஆக வேண்டும்

வாழ்வை முழுமையாக அனுபவித்து நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறத்தான் வேண்டும்.
அதே நேரத்தில் நீங்கள் ஆரோக்கியத்தாலும் மகிழ்ச்சியாலும் வலிமையாலும் உற்சாகத்தாலும்
அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும்.
ஏனெனில் அதுதான் ஒரு மகத்தான வாழ்க்கை.

நீங்கள் என்னவெல்லாம் ஆக விரும்புகிறீர்களோ எவற்றையெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ எவற்றையெல்லாம் பெற விரும்புகிறீர்களோ
அதை அடைவதற்கான சக்தி உங்களிடம் இருக்கிறது

நல்ல விஷயங்களையே அதிகரிக்க முடியும்
உங்கள் வாழ்வில் உள்ள எந்த ஒரு எதிர்மறையான விஷயத்தையும் மாற்ற முடியும்
உங்கள்ஆரோக்கியம் செல்வம் வேலை உறவுகள் மற்றும் உங்கள் வாழ்வின் எந்த ஒரு பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி அவற்றை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் சக்தி உங்களிடம்தான் இருக்கிறது.

உங்கள் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தி உங்களிடம் உள்ளது

அந்த ஆதிக்க சக்தி உங்களுக்குள் இருக்கிறது

அதுதான் அன்பு சக்தி அன்பு தான் நேர்மறை சக்தி யின் உச்சகட்ட ஆற்றல்.

🌷 கொடுத்தல்
பெறுதல் விதி 🌷

கொடுத்தல் என்னும் ஒவ்வொரு வினையும்
பெறுதல் என்னும் எதிர்வினையை உருவாக்குகிறது.
நீங்கள் பெறுபவை நீங்கள் கொடுத்தவற்றிருக்கு  இணையாகவே எப்போதும் இருக்கும்.

உங்கள் வாழ்வில் நீங்கள் எவற்றை வெளிப்படுத்து
கிறார்களோ? அவை மீண்டும் உங்களிடம் வந்தாக வேண்டும்.
பிரபஞ்சத்தின் இயற்பியல் மற்றும் கணிதம் இது.

நீங்கள் நேர்மறையாக நடந்து கொண்டால் நேர்மறையானவற்றைத் திரும்பப் பெறுவீர்கள்

எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தினால்  எதிர்மறையான விளைவுகளையே திரும்பப் பெறுவீர்கள்

நேர்மறையான போக்கை வெளிப்படுத்தினால்  நேர்மறையான விஷயங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கையை திரும்பப் பெறுவீர்கள்

எதிர்மறை போக்கை வெளிப்படுத்தினால் எதிர்மறையான விஷயங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கையை திரும்பப் பெறுவீர்கள்.

நீங்கள் எவ்வாறு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நடந்து கொள்கிறீர்கள் உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மூலம் தான்.