Wednesday, November 7, 2018

அன்பும் அக்கறையும்

~ Arul Prakash ~:
😍அன்பும் 😍
😍அக்கறையும்😍

கடவுள் அல்லது இந்த பிரபஞ்ச பேரறிவு நமக்கு சில சமயங்களில் சில கடினமான துன்பங்களை கொடுப்பதும் அல்லது சில விஷயங்கள் கிடைக்காமல் தடுப்பதும்.
(காதல் தோல்வி,
சில ஏமாற்றங்கள்
சில தடைகள் ஏற்படுவதை நாம் எப்பொழுதும் எதிர்மறையாக நினைக்கிறோம்.
எனவே அதை ஏற்காமல் இறைசக்தியை அல்லது விதியை குறை சொல்கிறோம்.
அல்லது சிற்றறிவை பயன்படுத்தி நம் அதிகாரபலத்தை பயன்படுத்தி கடவுளோ பிரபஞ்ச பேரறிவோ நமக்கு வேண்டாம் என தடுக்கும் விஷயங்களை நாம் வலுக்கட்டாயமாக அநியாயமாக இயற்க்கைக்கு எதிராக அடைய நினைக்கிறோம்.
ஆனால் அதில் இருக்கும் பேராபத்து நம் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.


நாம் விரும்பியது கிடைக்கும் என்பது
ஈர்ப்பு விதி!
ஆனால் நாம் தவறானதை விரும்பும் போது அல்லது நமக்கு ஒத்துவராத ஒரு நபரை நம் வாழ்க்கை துணையாக ஈர்க்க ஆசைபடும் பொழுது இறைசக்தி நம்மீதுள்ள அக்கரையால் அதை தடுத்து நமக்கு நம் குணத்திற்கேற்ற சிறப்பான வாழ்க்கை துணையை கொடுப்பதற்காக இந்த காதல் அல்லது திருமண ஏற்பாட்டை கூட தடை செய்யலாம். நாம் ஏன் நாம் ஆசைபட்டது விரும்பியது கிடைக்கவில்லை என சிலசமயம் வாழ்க்கையை நொந்து கொள்கிறோம்.
பலமுடையவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வன்முறையை பயன்படுத்தி சிலவற்றை வலுக்கட்டாயமாக அடைய நினைக்கிறார்கள் அதன் விளைவு இறுதியில் மோசமாக அமைந்துவிடுகிறது பிறகு வருந்தியும் பயனில்லை.

நாம் சிற்றறிவு

பிரபஞ்சம் பேரறிவு

சில சமயம் நாம் விரும்பிய ஆசைபட்ட சில விஷயங்கள் நமக்கு கிடைக்காதது நம் நன்மைக்காகத்தான்!
இது நம் சிற்றறிவிலிருந்து பார்த்தால் சாபமாக தெரியும்.
பேரறிவின் துணை கொண்டு பார்த்தால் வரமாக ஆசீர்வாதமாகத்
தெரியும்.

இதை புரிந்து கொள்வதுதான் வாழ்வின் மிகப்பெரிய ரகசியம்.

இந்த பெருண்மையை விளக்கும் ஒரு பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது

நான்
கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?

கடவுள் : தாரளமாக
கேள்

நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?

கடவுள் : சத்தியமாக!

நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க?

கடவுள் : என்னப்பா சொல்லுற நீ?

நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்

கடவுள் : ஆமாம்! அவசரத்துல என்னை கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டாய்.

நான் : கிளம்பினதே லேட் இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.

கடவுள் : ஆமாம் எனக்கு தெரியும்.

நான் : சரி! பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல ஒரே டிராஃபிக்ஜாம். ஆபீஸ்க்கு ஒரு மணிநேரம் லேட்.

கடவுள் : ஆமாம்! தெரியும்.

நான் : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடிச்சு அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிடுச்சு கடைசீயில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.

கடவுள் : ஆமாம் அதுவும் தெரியும்.

நான் : வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர் கிட்டே ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர் கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.

கடவுள் : ஆமாம் தெரியும்.

நான் : அதை பிடிச்சி! இதை பிடிச்சி! முட்டி மோதி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் ஆகி வேலை செய்யலஇன்னைக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே ஒரு நாள் உங்களை கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா?(கடவுள் பலமாக சிரிக்கிறார்.

சில வினாடிகள் கழித்து! பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின் படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்
போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

நான் : (அதிர்ச்சியுடன்)ஓ

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன்.
ஏன்னா! நீ ஆபீஸ் போகும்போது நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகிதான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.

நான் : (அடக்கத்துடன்) ஓ

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம் கடைசீயா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு!யாரும் அதை கவனிக்கல அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாகியிருக்கும்?

நான் : (கண்கலங்கியபடி)ம்ம்

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்கு காரணம்! அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

நான் : ம்ம்

கடவுள் : அப்புறம்

~ Arul Prakash ~:
அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது.

ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு
ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிச்சை தொட்டிருந்தால் அந்த கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய், ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.
என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

நான் : இப்போ புரிகிறது இறைவா! என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும். இது புரியாமல் உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

கடவுள் : மன்னிப்பு கேட்காதே! என்னை நம்பு, எப்போதும் எந்த சூழ்நிலையிலும்.அது போதும்!

நான் : நிச்சயமாக

கடவுள் : நீ திட்டமிடுவதை விட உனக்காக நான்திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்.

நான் : இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். உங்கள் அருளை சந்தேகப்படமட்டேன். கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னை காப்பதைபுரிந்து
கொண்டேன்.

கடவுள் : என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை!!!

நன்றி!

🌹🌹🙏🙏🌹🌹

No comments:

Post a Comment